கழிவுநீர் வடிகாலை கையால் அள்ளும் அவலம் - வைரலாகும் காட்சி

x

வெளி மாநில ஊழியர்கள் காரைக்கால் நகரின் முக்கிய மையப்பகுதி மற்றும் அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள கழிவுநீர் வடிகாலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கையுறை, முக கவசம், பாதுகாப்பு காலனி, அதிநவீன கருவி உள்ளிட்ட எந்த பாதுகாப்பு அம்சமும் இன்றி வெறும் கையுடன் கழிவுகளை வாளியில் எடுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கழிவு நீர் மற்றும் குப்பைகளை கையால் சுத்தம் செய்து அதனை கழிவு நீர் வடிகாலில் இருந்து வெளியே எடுத்து கொட்டும் வீடியோ, சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் இருந்து வெளியாக கூடிய மருத்துவ கழிவுகளும் அந்த வடிகாலில் தான் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்