ரேஸ் பைக்கில் பறக்கும் பள்ளி மாணவர்கள்... பெற்றோர்களுக்கு பாடம் புகட்டிய போலீசார் | Karaikal

x

காரைக்காலில் மீண்டும் மீண்டும் பள்ளிக்கூடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து செல்லும் மாணவர்களின் பெற்றோர்களை கண்டித்து மாவட்ட கண்காணிப்பாளர் உறுதிமொழி ஏற்க வைத்து பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

காரைக்காலில் மாணவர்கள் அதிவேகமாக இயக்கி வந்த ரேஸ் பைக்குகள் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், பள்ளி மாணவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்களை காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர். அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் பாலச்சந்தர் பெற்றோர்களை கடுமையாக எச்சரித்தார். மேலும், சிறார்களை வாகன ஓட்ட அனுமதிக்க மாட்டோம் என பெற்றோர்கள் உறுதிமொழி ஏற்க வைக்கப்பட்டனர். பின்னர் அபராதம் விதித்ததோடு, சிறார்கள் வாகன ஓட்டிய பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்