போக்குவரத்து தொழிலாளர்கள் Strike - ஓடாத பேருந்துகள்.. அவதியில் மக்கள்

x

போக்குவரத்து தொழிலாளர்கள் Strike - ஓடாத பேருந்துகள்.. அவதியில் மக்கள்

குமரி மாவட்டம், குழித்துறை அரசு போக்குவரத்து பணிமனை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால், பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

குழித்துறை பணிமனையில் பணிபுரிந்த பணியாளர்கள் இருவரை காரணம் கூறாமல் பணியிடை மாற்றம் செய்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், போக்குவரத்து பணியாளர்களை 12 மணி நேரம் வேலை செய்ய வற்புறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து, திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குழித்துறை பணிமனையில் இருந்து இயக்கக்கூடிய 130 அரசு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, பணிமனையில் இருந்து பேருந்தை இயக்க முயன்ற ஓட்டுநர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், பேருந்தை சிறைப்பிடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது


Next Story

மேலும் செய்திகள்