அரியவகை மணல் அள்ளும் திட்டத்தை கைவிட கோரிக்கை - சாலையில் திரண்ட மக்கள்

x

மிடாலம் முதல் நீரோடி வரை உள்ள பகுதிகளில் அரிய வகை மணலில் இருக்கும் அணுக்களை பிரிப்பதற்கான உரிமையை

மத்திய அரசிடம் இருந்து பெற்ற தனியார் நிறுவனம், மண் அள்ளும் பணியை தொடங்க, வரும் 1-ம் தேதி பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு, நீண்ட வரிசையில் மனிதச்சங்கிலி அமைத்தனர். அரிய வகை மணல் அள்ளும் திட்டத்தை கைவிடக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்