இளைஞரை ஓட ஓட விரட்டித் தாக்கிய கும்பல் - குமரியை மிரளவிட்ட சிசிடிவி

x

இளைஞரை ஓட ஓட விரட்டித் தாக்கிய கும்பல் - குமரியை மிரளவிட்ட சிசிடிவி

டாஸ்மாக் கடையில் மது அருந்த வந்த இளைஞர்கள், ஒருவரை மரக்கட்டை கொண்டு ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு இருசக்கர வாகனத்தில் மது குடிக்க வந்த நான்கு இளைஞர்கள் பயன்படுத்திய வாகனம், தேங்கி நின்ற மழைநீரில் சென்றபோது, அங்கு மது குடிக்க வந்த மற்றொரு நபர் மீது மழைநீர் தெறித்துள்ளது. இதனை அந்த நபர் தட்டி கேட்க, ஆத்திரமடைந்த இளைஞர்கள் சாலையோரம் இருந்த மரக்கடையில் இருந்து மரக்கட்டைகளை எடுத்து அந்த நபரை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இதில் அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய நான்கு இளைஞர்கள் மற்றும் காயமடைந்த நபரை பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று, விசாரணை நடத்தினர். பின்னர் காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தாக்குதல் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்