கோயிலுக்குள் வந்த கொள்ளையர்களை அலறி ஓடவிட்ட கடவுள் - பரபரப்பு சிசிடிவி

x

கோயிலுக்குள் வந்த கொள்ளையர்களை அலறி ஓடவிட்ட கடவுள் - பரபரப்பு சிசிடிவி

நாகர்கோவில் அருகே கோவில் லாக்கரை உடைத்து திருட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஈசாந்திமங்கலம் மெயின் ரோடு பகுதியில் செண்பகநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதற்காக நேற்று முன்தினம் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது கதவு உடைக்கப்பட்டு பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் உடைக்க முடியாததால் ஏமாற்றமடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்