ஷவர்மா பிரியர்களே உஷார்..! - வெளியான ஷாக் தகவல்

x

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனியார் ஹோட்டலில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வாந்தி, மயக்கம், ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் ஹோட்டல் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்