பயங்கர சத்தத்துடன் உள்ளே புகுந்த கடல் அலைகள்.. மூழ்கிய வீடுகள்.. அலறிய மக்கள்.. அதிர்ச்சி காட்சிகள்

x
  • வெள்ளிச்சந்தை அருகே உள்ள அழிக்கால் கிராம மீனவர்கள் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.
  • நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து காணப்பட்ட கடல் சீற்றத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்து பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்...
  • திடீரென பல அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலையானது பயங்கர சத்தத்துடன் ஊருக்குள் புகுந்தது. தண்ணீரும், மணலுமாக வீடுகளுக்குள் சென்றதால் அங்குள்ள மீனவர்கள் ஓட்டம் பிடித்தனர். நல்ல வேளையாக சீற்றம் உடனடியாக தணிந்ததால் மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
  • பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்... இதற்கு நிரந்தர தீர்வான தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று உயிர் பயத்துடன் மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்...

Next Story

மேலும் செய்திகள்