லீவுக்கு வந்த காலேஜ் மாணவி மயக்கம்..டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ந்த பெற்றோர் - சிக்கிய ஸ்கூல் தோழன்

x
  • கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறை தினத்திற்காக வீட்டிற்கு சென்ற மாணவி திடீரென மயங்கி விழுந்துள்ளார். மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது மாணவி கருவுற்றிருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவி தனது பள்ளி கால நண்பனை காதலித்த நிலையில், அவருடன் அவ்வப்போது தனிமையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் மாணவியின் பள்ளிக்கால நண்பன் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அந்த நபரையும் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்