ஒற்றை ஆளாய் கூட்டத்தில் குமரி பெண் விவசாயி வைத்த கோரிக்கை

x

பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் உடனடியாக பாசன நீர் தரவில்லை என்றால் த*கொலை செய்வேன் என மிரட்டிய பெண் விவசாயி, வேதனையுடன் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளார். தோவாளை சானலில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்து நீர் திறக்காவிட்டால், விவசாயிகள் த*கொலை செய்யும் நிலை ஏற்படும் என தங்கம் என்ற விவசாயி பேசிய ஆடியோ வெளியானது. இந்நிலையில், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய தங்கம், தண்ணீர் திறப்பதற்கான உரிய தேதியை அறிவிக்காமல் வேறு எதுவும் பேசக்கூடாது என உறுதிப்பட தெரிவித்தார். இதையடுத்து, 3ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். அறிவித்தபடி தண்ணீர் திறக்காவிட்டால், 4ஆம் தேதி த*கொலை செய்ய முயல்வோம் என எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்