13 வயது மகளை மிரட்டி சீரழித்த தந்தை.. உடம்பில் இருந்த காயம் - அதிர்ந்து போன தாய், பாட்டி

x

மகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியலை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் அருகே உள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தாயாரைக் கொலை செய்து விடுவதாகக் கூறி மிரட்டி தனது சொந்த மகளுக்கே தந்தை பாலியல் தொல்லை அளித்து வந்து இருக்கிறார். பள்ளி விடுமுறைக்காகப் பாட்டி வீட்டிற்குச் சிறுமி சென்ற போது அவரது உடலில் இருந்த காயங்கள் குறித்துக் கேட்ட போது நடந்தவைகளை கூறி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் சிறுமியின் தந்தையைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்