சவப்பெட்டியுடன் போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள் - குமரியில் பற்றிய தீ | Kanyakumari | Congress

x

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில், போக்குவரத்து நெருக்கடியை போக்கும் வகையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பாலான மேம்பாலம் கட்டப்பட்டது. பம்பம் பகுதியில் இருந்து குழித்துறை வரை சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரம் கட்டப்பட்ட இந்த பாலத்தில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சில பகுதிகள் சேதமடைந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக பாலம் சரிசெய்யப்பட்ட நிலையில், மீண்டும் பாலத்தின் நடுப்பகுதி சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் மற்றும் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர், பாலம் சேதமடைந்த பகுதியில் சவப்பெட்டி வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி கொட்டும் மழையிலும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்