மீண்டும் சேதமடைந்த இரும்புப் பாலம்..! ஸ்தம்பித்த போக்குவரத்து | Kanniyakumari

x

குமரி மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் அமைக்கபட்ட இரும்பாலான பாலம் 2வது முறையாக சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது... 6 மாதங்களுக்கு முன் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்காலிமாக சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே பழுது ஏற்பட்டு சேதமடைந்த பகுதிக்கு அருகில் மீண்டும் பாலத்தின் நடுப்பகுதி சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதால் பலத்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாலத்தை முறையாக பராமரிக்கதே இதற்குக் காரணம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்