போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கழுத்தை அறுத்து கொன்ற நண்பர்கள்.. குமரியில் அதிர்ச்சி சம்பவம்

x

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வீட்டின் மொட்டை மாடியில் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்கலை அடுத்த திருவிதாங்கோடு அண்ணா நகர் காலனியை சேர்ந்தவர் மகேஷ். 4 ஆண்டுகளுக்கு முன் உறவுக்கார பெண் ஒருவருடன் இளைஞருக்கு திருமணமான நிலையில், திருமணமான முதல் வருடத்திலே மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை மகேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில், சில நாட்களுக்கு முன் தன் பெற்றோரை பார்ப்பதற்காக அப்பெண் சென்னை சென்றதாக தெரிகிறது. இந்நிலையில், வீட்டில் தனியே வசித்து வந்த இளைஞர் மொட்டை மாடியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாடியில் மதுபாட்டில்களும், சுவற்றில் ரத்தக் கரைகளையும் கண்டுபிடித்த போலீசார், நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்