குளிர்ந்த பூமி - மகிழ்ந்த மக்கள் || RAINS ||TN ||

x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால், மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், காலை முதலே குளிர்ச்சியான சூழல் நிலவி வந்த நிலையில் பிற்பகலில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், குளிர்ச்சியான சூழலை அனுபவித்து, மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்