கொடுத்த பணத்தை கேட்டதால் ஆத்திரம்.. கழுத்தை கயிறால் இறுக்கி.. அதிர்ச்சி சம்பவம்

x

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பாலாற்று ஓடையில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

வாலாஜாபாத் ஐயன்பேட்டை கிராமத்தை சேர்ந்த 21 வயதாகும் தனுஷ், கடந்த 6ம் தேதி இரவு கடைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், மாயமான தனுஷை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே, முத்தியால்பேட்டை அடுத்த கோயம்பாக்கம் பாலாறு ஓடையில், மண்ணில் புதைந்த நிலையில் தனுஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் விஷ்வா மற்றும் சுந்தரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், தனுஷின் நெருங்கிய நண்பரான விஷ்வா, தனது ஆடம்பர செலவிற்காக தனுஷிடம் வட்டிக்கு பணம் பெற்றது தெரியவந்தது. பணத்தை தராமல் இழுத்தடித்து வந்த நிலையில், கொடுத்த கடனை தனுஷ் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஷ்வா, தனது நண்பர் சுந்தருடன் சேர்ந்து, தனுஷை கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்று ஓடையில் போட்டு மூடிவிட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்