கவுன்சிலர் மனைவி, அதிகாரி கணவன்.. ஜோடியாக சேர்ந்து ஆடிய ஆட்டம்..

x

கவுன்சிலர் மனைவி, அதிகாரி கணவன்.. ஜோடியாக சேர்ந்து ஆடிய ஆட்டம்..

திமுகவை சேர்ந்த மாவட்ட ஊராட்சி பெண் கவுன்சிலர் மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரியாக பணியாற்றும் கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 2வது வார்டு மாவட்ட ஊராட்சி பெண் கவுன்சிலராக ராஜலட்சுமி இருந்து வருகிறார். இவரது கணவர் குஜராஜ் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணி

நீர்வள ஆதாரத்துறை கீழ் பாலாறு துணைக் கோட்டத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவர் மற்றும் குஜராஜின் தாயார் தமிழரசி, சகோதரி ராஜேஸ்வரி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த ஏப்ரல் 2016 முதல் 2021 ஆம் காலகட்டம் வரை இருந்ததை காட்டிலும், தற்போது இவர்களின் சொத்து மதிப்பு வருமானத்திற்கு அதிகமாக சுமார் 3 கோடியே 98 லட்ச ரூபாய் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலங்கள், சொகுசு கார், பண்ணை வீடுகள் என பலவற்றை இக்காலகட்டத்தில் வாங்கி உள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்