கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதற்கு தேவையான சாலை வசதிகள் இல்லை என விழுப்புரம் கோட்ட மேலாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளது சுட்டி காட்டப்பட்டது. ஆனால், கல்வராயன் மலைப்பகுதியில் 95 சதவீதம் சாலை வசதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கல்வராயன் மலை கிராமங்களில் வாகன போக்குவரத்துக்கு உகந்த வகையில் சாலை வசதிகள் உள்ளதா? என வரும் 22ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்