கள்ளக்குறிச்சியில் பாஸ்டர் மனைவி, மகன் மீது கதற கதற கொடூர தாக்குதல் - தீயாய் பரவும் பயங்கர வீடியோ

x

கள்ளக்குறிச்சியில் பாஸ்டர் மனைவி, மகன் மீது கதற கதற கொடூர தாக்குதல் - தீயாய் பரவும் பயங்கர வீடியோ

கள்ளக்குறிச்சியில் மதபோதகர் குடும்பத்தைத் தாக்கியது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் மார்ட்டின் என்பவர் தேவாலயம் அமைத்து கடந்த 12 வருடங்களாக அப்பகுதியில் ஜெப கூட்டம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தேவாலயத்தில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு இருக்கின்றன. இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதில் கோவிந்தன் தரப்பினர் மார்ட்டினின் மனைவி மற்றும் குழந்தைகளைத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாகப் பரவியது. இது தொடர்பாகத் தகவல் கிடைத்த போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்