கல்வராயன் மலையில் நடக்கும் கேட்டாலே குலைநடுங்கும் சம்பவம் - அதிர்ச்சியில் மக்கள்

x
  • கருணாபுரம் கிராமத்தில் கடந்த ஜூன் 19ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன்பின்னர், சிறப்பு அதிரடிப்படை போலீசார் கல்வராயன்மலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, கள்ளச்சாராயத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக கள்ளச்சாராயம் தடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பல கிராமங்களில் கள்ளச்சாராயம் மற்றும் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்ச வியாபாரிகளுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களுக்கு பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்