மாற்றுத்திறனாளி சைக்கிளை இ-சைக்கிளாக மாற்றிய கல்லூரி மாணவர் - நெகிழ வைக்கும் சம்பவம்

x

கள்ளக்குறிச்சி அருகே மாற்றுத் திறனாளிக்கு சாதாரண சைக்கிளை இ-சைக்கிளாக மாற்றி கல்லூரி மாணவர் இலவசமாக வழங்கியுள்ளார். சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜா மணி என்பவர், சைக்கிளை வாங்கி, அதனை இ-சைக்கிளாக மாற்றி பயன்படுத்தி வருகிறார். இதுகுறித்து கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்து, உடைய நாச்சி புதூர் கிராமத்தை சேர்ந்த, ரங்கராஜ் என்ற உயரம் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி, இ- சைக்கிள் தாயாரித்து தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சைக்கிள் தயாரித்து இலவசமாக ராஜா மணி வழங்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்