நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணி.. ஆவணத்தை பார்த்த ஆட்சியர் அதிரடி உத்தரவு

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் அருதங்குடியில் சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், நீர்த்தேக்கத் தொட்டியின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அப்போது திட்ட ஆவணத்தில் இருந்த அளவும், கட்டப்பட்டு வரும் தூண்களின் அளவும் மாறுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கட்டுமானங்களை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் தரமான முறையில் சரியான அளவுகளில் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு தூண்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்