வெயில் தாக்கம் எதிரொலி... உச்சம் தொட்ட மல்லிகை விலை

x

சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை இரண்டாயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக உற்பத்தி குறைந்து வரத்து சரிவடைந்ததால் ஒரு கிலோ மல்லிகை பூ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்