நேருக்கு நேர் மோதாமல் - முதுகில் குத்திய தீவிரவாதிகள் - எல்லையில் இன்ஸ்பெக்டர் வீர மரணம்

x

ஜம்மு காஷ்மீர், உதம்பூர் பகுதியில் உள்ள சில் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசாரின் ரோந்து வாகனத்தின் மீதும் தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பதிலுக்கு ரோந்து குழுவினரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில், இன்ஸ்பெக்டர் குல்தீப் உயிரிழந்தார். இந்த நிலையில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடி தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்