பரபரக்கும் ஜம்மு-காஷ்மீர் - இந்த நேரத்தில் பிரதமர் மோடி போட்ட ட்வீட்

x

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 24 தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டுமென, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க முன் வருமாறும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்