நிலைகுலையும் ஜம்முகாஷ்மீர்.. என்ன தான் நடக்கிறது எல்லையில்?

x

தோடா மாவட்டம் கஸ்திகர் பகுதியில் இன்று அதிகாலை தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. தேடுதல் நடவடிக்கைகளுக்காக அரசுப் பள்ளியில் நிறுவப்பட்ட தற்காலிக பாதுகாப்பு முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்ததாகவும், இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக துப்பாக்கிச் சண்டை நீடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பதேர்வா, தோடா மற்றும் கிஷ்த்வார் பகுதியில், 25 வயது முதல் 30 வயது வரை உடைய சுமார் 10 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், பஞ்சாப் வழியாக அவர்கள் நுழைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்