``அமீருக்கு ரூ1கோடி;முக்கிய புள்ளிகளுக்கு ரூ21கோடி..'' - பங்கு கொடுத்த ஜாபர் - விசாரணையில் அம்பலம்

x

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் சுமார் 21 கோடி ரூபாயை, சில முக்கிய புள்ளிகளுக்கு ஜாபர் சாதிக் அனுப்பியது விசாரணையில் தெரியவந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கை, அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாபர் சாதிக் மற்றும் அவரது மனைவி அமீனா பானு ஆகியோரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து அதனடிப்படையில், ஜாபர் சாதிக்கிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், அமீனா பானுவின் வங்கி கணக்கில் இருந்து திரைப்பட இயக்குனர் அமீருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணம் அனுப்பபப்ட்டது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்பணத்தை போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்தாக ஜாபர் சாதி உறுதி செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, ஜாபர் சாதிக்கின் இரண்டாவது தம்பி மைதீன் வங்கி கணக்கில் இருந்து, சில முக்கிய புள்ளிகளுக்கு 21 கோடி ரூபாய் பணம் கைமாறி இருப்பதாகவும், வழக்கின் விசாரணை பாதிக்க கூடாதென்பதற்காக அவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக தெரிகிறது. இவ்வாறு, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை, பேரிச்சை பழம் இறக்குமதி வியாபாரத்தில் சம்பாரித்தது போல் சாதிக் கணக்கு காட்டியிருப்பதாகவும் கூறும் அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்