தமிழகத்தை அதிர வைத்த ஈஷா மருத்துவர் பாலியல் கொடுமை... 9 சிறுமிகள் நீதிபதியிடம் பரபரப்பு வாக்குமூலம்

x

ஈஷா யோகா மையத்தில் பணிபுரிந்த டாக்டர் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக, 9 பெண் குழந்தைகள் கோவை மாவட்ட நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஈஷா யோகா மையம் சார்பில் செம்மேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு மருத்துவ முகாமுக்கு சென்ற மருத்துவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த‌தாக புகார் எழுந்த‌து. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்சோ வழக்கு தொடர்பாக சாட்சிகளை பதிவு செய்வதற்காக, கோவை மாவட்ட மேஜிஸ்ட்ரேட்டிடம் போலீசார் அனுமதி கோரி இருந்தனர். நீதிபதி உத்தரவின் பேரில், 9 பெண் குழந்தைகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ய சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை தனி அறையில் வைத்து வாக்குமூலம் பெற்று நீதிபதி பதிவு செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்