"ஈஷாவைவிட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் கிடையாது" - "உச்சநீதிமன்றத்திற்கு ரொம்ப நன்றி"

x

"ஈஷாவைவிட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் கிடையாது" - உச்சநீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது என்று அந்த மையத்தைச் சேர்ந்த பெண் துறவிகள் கூறியுள்ளனர். ஈஷா பெண் துறவிகள் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் 18-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, ஈஷா மையத்தில் உள்ள 2 பெண் துறவிகளும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்