இன்ஸ்டா மோகத்தால் சிக்கிய இளைஞர்.. சென்னையில் சிறைக்கு சென்ற வாலிபர்.. தப்பிய ஜிகிரி தோஸ்த்

x

இன்ஸ்ட்ராகிராமில் வன்முறையை தூண்டும் விதமாக கத்தியை காட்டி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் குறித்தான வீடியோவின் ஐ.பி.எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சென்னை கொளத்தூரை சேர்ந்த சந்துரு என்பவரை கைது செய்திருக்கின்றனர். திரைப்பட வசனம் ஒன்றுக்கு கையில் கத்தியை வைத்துக் கொண்டு தனது நண்பணான ரஞ்சித் என்பவருடன் சேர்ந்து இளைஞர் ரீல்ஸ் பதிவிட்டிருக்கிறார். இளைஞரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில், தலைமறைவாக உள்ள ரஞ்சித் என்ற இளைஞரை தொடர்ந்து தேடி வருகின்றனர். இதனிடையே, இளைஞரின் இன்ஸ்டா ரீல்ஸ் இணையத்தில் பரவி வரும் நிலையில், நல்லொழுக்கமே நன்மை பயக்கும் என சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்