நாடு முழுவதும்.. நாளை காலை 6 மணி முதல்.. உச்சகட்ட பரபரப்பில் இந்தியா | India

x

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக, இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை சனிக்கிழமை காலை 6 மணி முதல், 18ம் தேதி காலை 6 மணி வரை, 24 மணி நேரம் மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருத்துவ சேவைகள், விபத்து சிகிச்சை பிரிவுகள் தவிர, வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு மற்றும் நவீன மருத்துவ சேவை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்