"ஒரு குவாட்டர் சிக்கன்" - கறி கடையில் நடக்கும் அமோக பாட்டில் விற்பனை.. வைரலாகும் வீடியோ

x

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே இறைச்சிக் கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. நாமகிரிப்பேட்டை காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் இறைச்சிக் கடையில், காலை 6 மணி முதல் மது விற்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதேபோன்று, ராசிபுரம் - சேந்தமங்கலம் பிரிவு சாலையில் உள்ள தேநீர் கடையிலும், டேபிள், சேர் உள்ளிட்ட வசதிகள் கொண்டு மது விற்பனை நடைபெறுகிறது. இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்