கணவன்,மனைவி அந்தரங்க வீடியோ.. பார்த்ததும் அலறிய பக்கத்து வீடு..தம்பதிகளே உஷார்..இப்படியும் நடக்கலாம்

x

கணவன்,மனைவி அந்தரங்க வீடியோ.. பார்த்ததும் அலறிய பக்கத்து வீடு..தம்பதிகளே உஷார்..இப்படியும் நடக்கலாம்

கார் ஓட்டுநர்களை குடும்ப உறுப்பினர்களாக கருதி தம்பதி வீட்டிற்குள் அனுமதித்த நிலையில், அவர்களின் அந்தரங்கங்களை மறைமுகமாக படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டிருக்கின்றனர் ஓட்டுநர்கள்... இந்த பகீர் சம்பவத்தின் முழுப் பின்னணியையும் பார்க்கலாம் விரிவாக...

கன்னியாகுமரி அருகேதான் இந்த சம்பவம்... சுற்றுலா வேன், ஆம்புலன்ஸ் என டிராவல்ஸ் நடத்தி வந்த தம்பதி, தங்களிடம் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த இந்த இருவரை, அவர்கள் பாம்பென தெரியாமல் பால் வார்த்து வளர்த்து வந்திருக்கின்றனர்...

கேரளாவை சேர்ந்தவரான சங்கீத் மற்றும் அருமனையை சேர்ந்த மிதுன் ஆகிய இருவரும் வெகு நாள்களாக தம்பதியிடம் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்திருக்கின்றனர்..

இருவரையும் கண்மூடித்தனமாக நம்ப ஆரம்பித்த தம்பதி, குடும்ப உறுப்பினர்களாக கருதி வீட்டிற்குள் அனுமதித்து உறவாடி இருக்கின்றனர்..

இந்நிலையில், சில நாள்களுக்கு முன் தம்பதிக்கும், இருவருக்குமிடையே மனக் கசப்பு ஏற்பட்டு தகராறாகி இருக்கிறது..

இதில், இருவரையும் தம்பதி வேலையை வீட்டு நிறுத்தியதில்தான் இந்த சம்பவம்...

இருவரும் வேலையை விட்டுச் சென்ற சில நாள்களில் தம்பதியின் வாட்ஸ் அப்பிற்கு வந்த வீடியோ ஒன்று இருவரையும் ஆட்டம் காணச் செய்திருக்கிறது..

தம்பதியின் அந்தரங்க வீடியோக்களை செல்போனில் படம் பிடித்து அனுப்பியிருக்கின்றனர்...

அடுத்து சில நிமிடங்களிலே, வெளிநாட்டு எண்ணில் இருந்து வந்த வாட்ஸ் அப் காலில், சம்பந்தப்பட்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க 10 லட்சம் ரூபாய் வேண்டும் எனக்கூறிய அந்நபர், வீடியோவை பக்கத்து வீட்டுக்காரருக்கு அனுப்பி ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார்...

புது நம்பரால் யாரென கண்டுபிடிக்க முடியாமல் செய்வதறியாது தவித்த தம்பதியை பக்கத்து வீட்டுக்காரர் தொடர்பு கொண்டிருக்கிறார்..

உங்களிடம் கார் ஓட்டுநராக பணி புரிந்து வந்த சங்கீத், தனக்கு இப்படிபட்ட வீடியோவை அனுப்பியிருப்பதாக கூறவே, தம்பதிக்கு அனைத்தும் புரிய ஆரம்பித்திருக்கிறது..

குடும்ப உறுப்பினர்களாக கருதி வீட்டிற்குள் அனுமதித்து உறவாடிய சங்கீத்தும், மிதுனும், தங்களின் அந்தரங்களை மறைமுகமாக படம்பிடித்து, பாம்புக்கு பால் வார்த்தது போல் துரோகம் செய்திருப்பதை அறிந்த நிலையில் போலீசில் புகாரளித்தனர்....

கன்னியாகுமரியில் பகீர் கிளப்பியிருக்கும் இந்த சம்பவத்தில், விசாரணையை கையிலெடுத்திருக்கும் போலீசார் தலைமறைவாக இருக்கும் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்