ஊரையே குலைநடுங்கவிட்ட வெறிநாய் - 3 வயது குழந்தை உள்பட 9 பேர் உயிருக்கே வந்த அபாயம்

x

ஒசூர் அருகே வெறிநாய் கடித்து படுகாயமடைந்த 9 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒசூர் அருகே உள்ள தொட்டமெட்டரை, சின்ன மெட்டரை மற்றும் பந்தரப்பள்ளி பகுதியில் வெறி நாய் ஒன்று பலரை துரத்தி சென்று கடித்து குதறியது. விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை உள்பட 9 பேரை கடிந்த அந்த வெறி நாய் சாலையில் செல்வோரை எல்லாம் துரத்தியுள்ளது.

நாயிடம் கடி வாங்கிய அனைவரும் சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தெருவில் சுற்றித்திரிந்த வெறி நாயை பொதுமக்கள் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்