ரோடு ரோலரால் சல்லி சல்லியாக நொறுக்கி கெத்து காட்டிய போலீஸ் - சந்தோஷமாக பார்த்து ரசித்த மக்கள்

x

ரோடு ரோலரால் சல்லி சல்லியாக நொறுக்கி கெத்து காட்டிய போலீஸ் - சந்தோஷமாக பார்த்து ரசித்த மக்கள்

ஒசூரில் அதிக சத்தம் தரும் பைக் சைலன்சர்களை பறிமுதல் செய்து ரோடு ரோலர் கொண்டு போலீசார் அழித்தனர். கோலார் நகரம் அம்மாவாரி பகுதியில் இளைஞர்கள் சிலர் அதிகம் சத்தம் எழுப்பும் சைலன்சரை பைக்கில் வைத்து ரேஸ் போவது போன்று அச்சுறுத்துவதாக மக்கள் புகார் கூறி வந்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் அம்மாவாரி பகுதியில் தீவிர சோதனைகளை ஈடுபட்ட போலீசார், 150 இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்ட அதிக சத்தம் தரும் சைலன்சர்களை பறிமுதல் செய்து மக்கள் முன்னிலையில் சாலையில் போட்டு அழித்தனர். மேலும் விதிமீறலில் ஈடுபட்டதாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதமும் விதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்