ஒரே நாளில் முடிந்த 3 உயிர்கள்.... பேரதிர்ச்சி சம்பவம் | Hosur

x
  • ஒசூர் அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில், 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். பெங்களூரை சேர்ந்த ஜெயந்த் என்பவர் தனது நண்பர்களான அபி மற்றும் நந்தாவுடன் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரிக்கு சென்று கொண்டிருந்தனர். ஓசூர் அருகே முன்னால் சென்ற அரசு பேருந்து மீது, இவர்களின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெயந்த், அபி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த நந்தா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவர், இரவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்