"எந்த அரசு அமைந்தாலும்.." - சூளுரைத்த கெஜ்ரிவால்

x

பண்டூரி பகுதியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் சாலை பேரணியில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்கு முன்பு, டெல்லி மற்றும் பஞ்சாபில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என்ற இரு கட்சிகள் மட்டுமே இருந்த‌தாக தெரிவித்த அவர், இரு மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க மக்கள் வாக்களித்த‌தாக கூறினார். இரு மாநிலங்களிலும் பெரும்பான்மை கிடைத்த‌தால், மக்கள் நலனுக்காக பணியாற்றியதாக தெரிவித்த கெஜ்ரிவால், ஹரியானாவில் எந்த அரசு அமைந்தாலும் மக்களுக்கு இலவச மின்சாரத்தை பெற்று தருவது தன்னுடைய பொறுப்பு என்றார். ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா என்று மக்கள் கேட்பதாக குறிப்பிட்ட கேஜ்ரிவால், எந்த அரசு அமைந்தாலும் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவின்றி ஆட்சி அமைக்க முடியாது என்று உறுதிபட தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்