சென்னை எக்ஸ்பிரஸ்ஸில் ரயில்வே பெண் இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த கொடுமை.. டிடிஆர் செய்த காரியம்

x

ரயிலில் இருந்து தள்ளி விட முயன்றதாக டிக்கெட் பரிசோதகர் மீது ரயில்வே பெண் இன்ஸ்பெக்டர் புகார் அளித்துள்ளார். மங்களூரில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், சேலத்தில் 2-ஆம் வகுப்பு ஏசி கோச்சில் அந்த பெண் இன்ஸ்பெக்டர் ஏறினார். அனுமதிச் சீட்டு வைத்திருந்த போதிலும், அவரிடம் சென்னையைச் சேர்ந்த சரவணக்குமார் என்ற டிக்கெட் பரிசோதகர், தன்னிடம் கேட்காமல் எப்படி ஏறலாம் எனக் கேட்டு திட்டி, கீழே இறங்குமாறு கூறி கதவு வரை தள்ளி சென்றுள்ளார். இதையடுத்து, ஜோலார்பேட்டையில் இறங்கிய பெண் இன்ஸ்பெக்டர், டிக்கெட் பரிசோதகர் மீது சென்னை ரயில்வே எஸ்பிக்கு புகார் மனு அனுப்பினார். அதன்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்