திறந்த இரண்டே மாதத்தில் இடிந்து விழுந்த அரசு பள்ளியின் மேற்கூரை...கொந்தளித்த பெற்றோர்

x

செய்யாறு அருகே, 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, திறந்து 2 மாதமே ஆன அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டரை கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளி கட்டடம் 65 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. 2 தளங்களில் 4 அறைகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டடம் 2 மாதத்திற்கு முன்பு செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் கட்டடத்தின் இரண்டாம் தளத்தின் சிமெண்ட் மேற்கூரைபூச்சு பெயர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக மாணவர்கள் வகுப்பறையில் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்