எக்மோர் ஸ்டேஷன் அருகே நேருக்கு நேர்.. 50 பயணிகளுடன் சென்ற மாநகர பேருந்து காருடன் மோதல்

x

எக்மோர் ஸ்டேஷன் அருகே நேருக்கு நேர்.. 50 பயணிகளுடன் சென்ற மாநகர பேருந்து காருடன் மோதல்

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே மாநகர பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. வளைவில் திரும்பும் போது திடீரென எதிர்திசையில் வந்த கார் ஒன்று மாநகர பேருந்து மீது நேருக்கு நேர் மோதி நின்றது. விபத்தில் காரின் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்த நிலையில், பேருந்தின் முன்பக்கம் லேசாக சேதமடைந்து. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி தப்பினர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்