"வெள்ளை பேப்பரில் 25 லட்சம்?" - பிரபல ஜூவல்லரி 40 பவுன் நகை டெலிவரி செய்ததும் காத்திருந்த அதிர்ச்சி

x

"வெள்ளை பேப்பரில் 25 லட்சம்..?" - பிரபல ஜூவல்லரி 40 பவுன் நகை டெலிவரி செய்ததும் காத்திருந்த அதிர்ச்சி

25 லட்சம் மதிப்பிலான நகைகளை பெற்று, பணத்திற்கு பதிலாக வெள்ளைத் தாள்களை கொடுத்து மோசடி செய்த நபரை மும்பையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற நகை கண்காட்சியில் பங்கேற்ற சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த நகை விற்பனை நிறுவனம், அதன் நகைகளை பார்வைக்கு வைத்துள்ளது. அப்போது, ஜோத்பூரை சேர்ந்த நகை வியாபாரி ராகேஷ் ஜெயின், 25 லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் 320 கிராம் எடை கொண்ட நகைகளை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து கடந்த 22-ம் தேதி நிறுவனத்தை தொடர்பு கொண்ட அவர், தான் அவசரமாக ஹைதராபாத் செல்வதால், நகைகளை அனுப்பினால் பணம் தருவதாக கூறியள்ளார். இதனையடுத்து ஊழியர்கள் இருவர் நகைகளை அளித்து பணத்தை பெற்று திரும்பியுள்ளனர். பின்னர் பணத்தை பார்த்த போது அவை வெள்ளை தாள்கள் என தெரிய வந்ததை தொடர்ந்து புகாரளிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மும்பையில் பதுங்கி இருந்த கல்லூராம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்