கேலோ இந்தியா - தங்கம் வென்ற தமிழக வீராங்கனை மகிழ்ச்சி பேட்டி

x

கேலோ இந்தியா - தங்கம் வென்ற தமிழக வீராங்கனை மகிழ்ச்சி பேட்டி

கேலோ இந்தியா மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில், தமிழக வீராங்கனை பூஜா ஆர்த்தி, தங்கம் வென்றார்.

சேத்துப்பட்டு, நேரு பார்க் ஸ்குவாஷ் அகாடமியில், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில், மகாராஷ்டிரா வீராங்கனை நிரூபமா துபேவை, தமிழக வீராங்கனை 3க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதனால், ஸ்குவாஷ் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டே தங்கம் வென்ற சாதனையையும், பூஜா ஆர்த்தி படைத்துள்ளார். மேலும், மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டின் தீபிகா, ஷமினா மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சந்தோஷ், ஹரிஹந்த் ஆகியோர் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். இதனால், ஸ்குவாஷ் போட்டியில் நேற்று மட்டும் தமிழ்நாட்டிற்கு ஒரு தங்கம் மற்றும் 4 வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்