சென்னையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் படுகாயம் அடைந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

x

சென்னை, திருவொற்றியூரில் வசிக்கும் அமுதா என்பவர்

நேற்று இரவு கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்த போது, பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது அமுதாவின் ஓட்டு வீடு சுக்கு நூறாக நொறுங்கி இருந்தது. அமுதாவுக்கு தீக்காயம் ஏற்பட்டிருந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிலிண்டரை கைப்பற்றி சோதனை செய்ததனர். சிலிண்டரில் இருந்து வாய்வு கசிவு ஏற்பட்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்