நகைக்கடை நடத்தி மோசடி - பொங்கி எழுந்த மக்கள்

x

சேலம் உட்பட 6 மாவட்டங்களில் 100 கோடிக்கு மேல் மோசடி செய்து நகைக்கடை உரிமையாளர் தலைமறைவான நிலையில், ஆத்தூரில் நகைக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். வலசையூரை சேர்ந்த சபரி சங்கர், சேலம், திருச்சி, கரூர் உட்பட 6 மாவட்டங்களில் எஸ்விஎஸ் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சங்கர், தீபாவளி முதல் அனைத்து கிளைகளையும் மூடிவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், பணியாளர்கள் பணத்தை திருப்பி தரக்கோரி ஆத்தூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்