பிரான்சில் ஒலிம்பிக் போட்டி - புதுச்சேரியில் மெய்சிலிர்க்க கோலாகல கொண்டாட்டம்

x

பிரான்சில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் தூதரகம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி ஒலிம்பிக் சங்க தலைவரும் வேளாண்துறை அமைச்சருமான ஜெயக்குமார் பங்கேற்று, ஒலிம்பிக் கொடியை அறிமுகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் நடைபெற்றன. இதில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்