"எங்களுக்கும் தாங்க" - உச்சகட்ட வேதனையில் தவிக்கும் தூய்மை பணியாளர்கள்

x

தீபாவளி போனஸ் மற்றும் சம்பள தொகையை உடனடியாக வழங்க கோரி சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து பேச்சுவார்த்தைக்கு

வந்த மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில் புத்தாடை, பட்டாசுகள் வாங்க வழியின்றி

தவிப்பதாக தூய்மை பணியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்