மலைக்க வைக்கும் மல்லி.. உச்சம் தொட்ட பூக்களின் விலை

x

சுப முகூர்த்தம், பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட காரணங்களால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தோவாளை சந்தையில் பூக்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ 2 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு கிலோ மல்லிகைப்பூ ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கனகாம்பரம் கிலோ 400 ரூபாய்க்கும், தாமரை 10 எண்ணம் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வு காரணமாக சிறு வியாபாரிகள், வழக்கத்தைவிட மிக குறைவாகவே பூக்களை வாங்கிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்