புரட்டாசி விரதத்தால் வெறிச்சோடிய மீன் சந்தை... கவலையில் மீனவர்கள் | Ramanathapuram

x

மீன் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட குறைந்த அளவு விசைப்படகுகளில், மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். போதிய மீன்கள் கிடைக்காததால் கவலை அடைந்துள்ளனர். மேலும், புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து அசைவ பிரியர்கள் மீன்களை விரும்பி வாங்க வராததால் மீன்களின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் ஒரு படகிற்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்