நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 27 பேர் கைது | Fisherman Arrested

x

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 27 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனைக் கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இடண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்