பட்டாசு ஆலையில் விழுந்த இடி - நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளர்கள்

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையின் மீது இடி விழுந்ததில், 2 அறைகள் தரைமட்டமாகின. கங்கரக்கோட்டை பகுதியில் மணிகண்டன் என்பவரி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இடி, மின்னலுடன் மழை பெய்ய தொழிலாளர்கள் ஆலையை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். சற்றுநேரத்தில், இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் இருந்த 2 கெமிக்கல் அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து வழக்குபதிந்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்